Powered by Blogger.
எதிர்பார்ப்புகள் அனைத்தையும் விட்டு
வாழக் கற்றுக்கொள்கிறேன்
எத்தனையோ ஏமாற்றங்களை
சந்தித்து கடந்து வந்த 
இந்த நொடி முதல். 

Tamil Motivational Quotes
Tamil Motivational Quotes

​வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற் கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.

தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் என்ற AutoFormat As You Type டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.​

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தரையிலும் சுவரிலும் சோலார் பேனல் பெயின்டை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின்உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். 

உலகம் முழுவதும் சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனல், நீர்மின் திட்டங்களில் மின்உற்பத்தி குறையும் பகுதிகளில் சோலார் மின் உற்பத்தியில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. மக்களும் அரசுகளும் இதில் சற்று தயக்கம் காட்டுவதற்கு காரணம்.. சோலார் பேனல்கள் அமைப்பதற்கு ஆகும் அதிகப்படியான செலவு. வருங்காலத்தில் சோலார் பேனலுக்கு அதிகம் செலவிட அவசியம் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபற்றி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பஃபல்லோ பல்கலைக்கழக எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான கியாவ்கியாங் கான் கூறியதாவது: ஒளி ஆற்றலை மின்சாரமாக மாற்றும் திறன் பெற்ற சோலார் செல்களின் தொகுப்புதான் சோலார் பேனல் எனப்படுகிறது. 

பொதுவாக பாலி கிரிஸ்டலைன் சிலிகானை கொண்டுதான் இந்த பேனல் உருவாக்கப்படுகிறது. மெலிதான பிலிம் போல பேனலை தயாரிப்பதென்றால் அமார்பஸ் சிலிகான் அல்லது காட்மியம் டெல்யூரைடு பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு வகையுமே அதிக செலவு ஏற்படுத்தக் கூடியவை. குறைந்த செலவிலான சோலார் பேனல்களை உருவாக்கும் முயற்சி உலகம் முழுக்க நடக்கிறது. அந்த வகையில் பிளாஸ்மோனிக் தன்மை கொண்ட ஆர்கானிக் வகை பொருட்களை சோலார் பேனலாக பயன்படுத்தினால் அதிக மின்உற்பத்தி செய்ய முடியும். செலவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும், இது திரவ வடிவில் இருப்பதால் பயன்படுத்துவதும் எளிது. திரவ வடிவில் இருக்கும் சோலார் பேனலை சுவர், தரை என எந்த பகுதியிலும் பெயின்ட் போல எளிதில் பூச முடியும். வெளிச்சம் கிடைக்கும் எல்லா இடத்திலும் இந்த பெயின்ட் அடித்தால் மின்உற்பத்தியும் அதிகளவில் நடக்கும். இது மட்டுமின்றி கார்பனை அடிப்படையாக கொண்ட சிறு மூலக்கூறுகள், பாலிமர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பிலிம் வகை சோலார் பேனல் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இவற்றையும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும். இவ்வாறு கியாவ்கியாங் கான் கூறினார்.
சென்னை மருத்துவ மருந்தியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பேராசிரியர் டாக்டர் கே.விஜயசாரதி. இவர், மந்தைவெளி மார்க்கெட் அருகில் கே.கே.ஆர் மருத்துவமனையை நிறுவி கடந்த 12 ஆண்டுகளாக அனைத்து புற்று நோய்க்கும் சிகிச்சை அளித்து வருகிறார்

இவர் கூறியதாவது:- 

நெருப்பை போன்றது புற்றுநோய். உடலில் ஒரு பாகத்தில் ஆரம்பித்து அதன் கோடிக்கணக்கான விதைகள் ரத்தம் மூலம் மூளை, இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரலுக்கு சென்று தங்கி வளரும். 
ஆரம்பித்த பாகத்தில் ரேடியோ தெரபியோ அல்லது அறுவை சிகிச்சை செய்தாலும் நோய் குணமாவதில்லை. பெரும்பாலோருக்கு சில மாதங்களிலேயே அத்தியாவசிய பாகங்களுக்கு பரவி உயிரை பறித்து விடுகிறது. 

இன்று பெரும்பாலான புற்றுநோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை சரியான கலவையில் நரம்பு வழியாக ரத்தத்தில் செலுத்தினால் சி.டி., எம் ஆர்.ஐ, பிஇடி ஸ்கேனுக்கு தெரியாமல் பரவியுள்ள புற்றுநோய் விதைகள் அழிவதுடன் முதலில் வந்த பெரிய கட்டியும் சுருங்கி சக்கை ஆகிவிடும். 

மேலும் தேவையெனில் சிறிய அறுவை சிகிச்சை அல்லது ரேடியோ தெரபியோ செய்யலாம். இத்தகைய நவீன மருந்து சிகிச்சையிலும் மார்பக புற்று, மூச்சுக்குழாய், உணவு குழாய், கர்ப்பப்பை, நாக்கு, ஆண் குறி, நுரையீரல், மலப்பை புற்று மற்றும் குழந்தைகள் புற்றுநோய்க்கு ஆபரேஷன் செய்யாமல் சிகிச்சை அளிக்கலாம். 

எய்ட்ஸ் நோயில் பிழைத்தவரில் பலருக்கு சில ஆண்டுகளில் புற்றுநோய் வருகிறது. புற்றுநோயாளிகள் சிலருக்கு எய்ட்ஸ் இருக்கிறது. சமீபத்திய நவீன சிகிச்சை முறைகளில் எய்ட்ஸ் + புற்றுநோய் நோயாளிகளுக்கும் நல்ல வைத்தியம் செய்யலாம் என்றார். 

மேலும் விவரங்களுக்கு 98840 57000/93806 57000/04442067705 என்ற எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.